Show all

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று திடீரென தீ

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

 

நாடாளுமன்ற வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தின் அறை எண் 212-ல் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் நாடாளுமன்ற வளாக கட்டிடங்கள் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

 

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.