Show all

சின்மயியை அழவைத்து விட்டாராம் சவுகார் ஜானகி!

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரையுலகை எனக்குந்தான் இயக்கம் சில மாதங்களுக்கு முன்னால் உலுக்கியது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் சொல்லி அதிர வைத்தனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த எனக்குந்தான் புகார் குறித்து பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் கூறும்போது, 'விளம்பரத்துக்காக என்றோ நடந்தது. நடக்காதது. நடந்திருக்க வேண்டியது இதையெல்லாம் இப்போது வெளியே சொல்வது தேவையா? உண்மையில் எனக்குந்தான் விவகாரம் யாரை புண்படுத்துகிறது? சொல்பவர்களின் குழந்தை. குடும்பத்தைத்தான் புண்படுத்துகிறது. இலைமறை காயாய் இருந்தால்தான் வாழ்க்கை' என்றார்.

'இதன் மூலமாக அவர்கள் எதனை நிரூபிக்க பார்க்கிறார்கள்? நான் பெண்களுக்காக நிற்கிறவள். ஆனால் இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சொல்லக்கூடிய விசயம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கலாம். அதனை விளம்பரப்படுத்த வேண்டாம். பெரிய அரசியல்வாதிகளையோ, பிரபலமானவர்களையோ சர்ச்சையில் சிக்க வைப்பதால் மட்டும் பெரிய ஆளாக ஆகிவிட முடியாது. அப்படி செய்வது கேவலம்' என்றும் கண்டித்து இருந்தார்.

அது தன்னை அழவைத்ததாக சின்மயி கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.