Show all

ஒரு லட்சத்து எழுபதாயிரம் உயரதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் அச்சத்தில்...

மூன்று லட்சம் பேரை ராணுவப் பணியில் இருந்து நீக்குவதாக சீன அதிபர் அறிவுத்துள்ள நிலையில் இந்த முடிவால் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் உயரதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படப் போகும் அச்சத்தில் தவிக்கின்றனர்.

உலகத்தில் அதிக அளவு மக்கள் தொகையை கொண்ட சீனா பக்கத்து நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ராணுவத்திற்கென பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்கப்படுவதுண்டு.

அப்படி ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டிருந்த சீனாவில் 3 லட்சம் ராணுவ வீரர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அதிகர் ஜி ஜின்பிங் சில தினங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாலும், தரமான வீரர்களை கொண்டு வலிமையான ராணுவத்தை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் விளைவாக லெப்டினண்ட் ஜெனரல், கர்னல் என ராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் 2017-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாய முறையில் ராணுவத்தை விட்டு வெளியேற்றப்படும் அனைவருக்கும் நியாயமான ஓய்வுக்கால இழப்பீடு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சீன ராணுவத்தில் இப்படி ஆட்குறைப்பு செய்வது இது நான்காவது முறையாகும். இதற்குமுன், கடந்த 1987-ம் ஆண்டு 4.238 மில்லியனில் இருந்து 3.235 மில்லியனாக குறைக்கப்பட்டது. 1997-ம் ஆண்டு 5 லட்சம், 2003 முதல் 2005 வரை 2 லட்சம் வீரர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் 3 லட்சம் பேரை ராணுவ வேலையில் இருந்து வெளியேற்றுவதாக சீனா அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.