Show all

தமிழகத்தைச் சோகத்தில் ஆழ்த்திய கஜா! எவ்வளவோ முன்னெச்சரிக்கைக்கு இடையிலும், இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு  இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் 4 பேர், அதிராம்பட்டினத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டுக்கோட்டையில் பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,973.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.