தமிழர்களை தலை நிமிர செய்வேன் என உறுதியளிக்கும் ஆட்சியாளர்கள்
முதலில் தங்களது அமைச்சர்களைத் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கும், எதிலும் தமிழ் இல்லை என்ற கவலை ஆட்சியாளர்களுக்கு
இல்லை என குற்றம்சாட்டினார். கெயில் எரிவாயு திட்டம், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் திராவிட
கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக சீமான் குற்றம்சாட்டினார்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.