சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த அசாமை சேர்ந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகைக்குள் அலுவலர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே, நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆசீகோ போரோ என்பது தெரிய வந்தது. எதற்காக உள்ளே நுழைந்தார் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர;;.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.