Show all

திருமணத்தை நிறுத்திய திமுக பதாகை! இது கொஞ்சமல்ல ரொம்ப கூடுதல்தான்

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரணி அருகே உள்ள ராந்தம் தௌ;ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். திமுக பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அதிமுகவை சேர்ந்தவர்கள்.

இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் திமுக பதாகை வைத்தனர். திமுக கட்சி கொடி கட்டியிருந்தனர்.

நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த திமுக பதாகையால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி திமுக பதாகை வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்தத் திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை அகவை 27 என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி சண்முகம் ஆரணி வட்டாரக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்தை நிறுத்திய திமுக பதாகை! தேர்தலுக்குப் பின்னால், பாஜக தயவால் ஆட்சியில் இருக்கும் அதிமுக இருக்குமா என்பதே கேள்வி ; இந்த நிலையில், இது கொஞ்சமல்ல ரொம்ப கூடுதல்தான் என்று மக்கள் சிரிக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.