Show all

தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் தி.மு.க.வில் இணைந்தார்

தே.மு.தி.க. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர் யுவராஜ். விஜயகாந்தின் தீவிர ஆதரவாளரான இவர் இன்று காலை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்தனர்.

     விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக  எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக தி.மு.க. வுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்றும் கருதினோம். தொண்டர்களின் விருப்பமும் அதுவாக இருந்தது.

ஆனால் அவர் தி.மு.க. வுடன் கூட்டணி சேராமல் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது எங்களை போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்று எனக்கு காரணம் தெரியாது. அவரது இந்த முடிவு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.

அவரது கூட்டணி முடிவு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததால் நான் தி.மு.க.வில் இணைந்தேன்.

என்னை போன்ற பெரும்பாலான தொண்டர்களும் தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வரும் எண்ணத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் தே.மு.தி.க.வினர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்தின்  பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வந்து விட்டேன்.இவ்வாறு யுவராஜ் கூறினார்.

 

இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த தே.மு.தி.க.வினர் 130  பேர் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் அறிவாலயம் சென்று தி.மு.க.வில் இணைந்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.