Show all

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் முன்னேற்றப் படை

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில், தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் முன்னேற்றப் படை

ஆகிய இரு அமைப்புகள் போட்டியிடுகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.

இன்று சென்னையில் விஜயகாந்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

வரும் 10-ம் தேதி மாமண்டூரில் எனது தலைமையில் மாபெரும் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. அது குறித்து விஜயகாந்தை சந்தித்தேன்.

தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்,

பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவனும், தமிழர் நலனுக்காக போராடும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் தமிழ் புலிகள் கட்சியும், தமிழர் முன்னேற்றப் படையும் போட்டியிடும்.

 

மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றார் வைகோ.

 

இந்த இரு அமைப்புகளுக்கும் எத்தனை சீட், எந்த தொகுதி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

 

வரும் 10-ம் தேதி மாமண்டூரில் நடைபெற உள்ள தேர்தல் சிறப்பு மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.