திருவண்ணாமலை, வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்
விலகியதால், எந்த பாதிப்பும் இல்லை. தே.மு.தி.க., தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ள இயக்கம்,
என, தே.மு.தி.க., ஆரணி சட்டமன்றஉறுப்பினர் பாபுமுருகவேல்
கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை
வடக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலாளர் கார்த்திகேயன், சந்திரகுமார் அணிக்கு சென்றதால்,
இயக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க., - தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல்,
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்துள்ளார்.
சில புல்லுருவிகள், யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு,
கட்சி தொண்டர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தனி ஒரு மாவட்ட நிர்வாகியை
நம்பி, இந்தக் கட்சி செயல்படவில்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி செயல்படும் கட்சி, தே.மு.தி.க. பத்து பேர் வெளியே சென்றால், கட்சி அழிந்து விடாது.
இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலையில், மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில், எம்.எல்.ஏ.,
சந்திரகுமாரின் உருவ பொம்மையை எரித்து, தே.மு.தி.க.,வினர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.