சட்டமன்றத் தேர்தல்
நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறன. யார் யாருடன்
கூட்டணி வைப்பார்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இப்போதைக்கு திமுக-காங்கிரஸ்
கூட்டணி மட்டும்தான் உறுதியாகியிருக்கிறது.
மற்ற எந்த கட்சிகளும் இன்னும் தங்கள் கூட்டணி பற்றி தெளிவாகக் கூறவில்லை. இந்நிலையில்,
இதுநாள் வரை அதிமுக கூட்டணியில் நீடித்த சமத்துவ மக்கள் கட்சி தற்போது அந்த கூட்டணியிலிருந்து
விலகுவதாக அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு
நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச்
சந்தித்தது. அதிமுக வெற்றி பெற்ற பிறகு அந்த கூட்டணியிலேயே நீடித்து வந்தது. தேர்தல் நெருங்கி
வரும் வேளையில், அதிமுக கூட்டணியிலேயே நீடித்து வருகிறோம் என்று சரத்குமார் சமீப காலமாக
கூறிவந்தார். அதன் பின் நாங்கள் கூட்டணியில் நீடிக்கிறோமா இல்லையா என்பதை கூட்டணி கட்சி
தலைவரான ஜெயலலிதா கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், திடீரென
அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தற்போது சரத்குமார் அறிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.