Show all

கூட்டநெரிசலில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்கா பெரிய மசூதி மீது  கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ்  பயணம் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களின் மதக் கடமையை ஆற்ற மெக்காவுக்குப் படை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மெக்கா அருகே ஒரே இடத்தில் லட்சக்கணக்கான யாத்தீரிகர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில்  சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 380 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.