Show all

சாதி மோதல் நடக்கும் என்பதை முன் கூட்டியே எப்படி சொல்ல முடியும்? சிமான் கேள்வி

வைகோ தேர்தலில் போட்டியிடாமல் விலகியதற்கு, சாதி மோதலுக்கு வாய்ப்புள்ளதாக காரணம் கூறுவதை ஏற்க இயலாது என சீமான் தெரிவித்தார்.

திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் உண்மையான மாற்று, திராவிட இனமே கிடையாது. திராவிடர்கள் என்பது ஏமாற்று வேலை. ஆதி குடியே தமிழ் குடிதான். திராவிடக் கட்சிகள் தான் சாதியை கொண்டு வந்தன.

சாதி ரீதியாக யார் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் திராவிட கட்சிகள் சீட்டு கொடுக்கிறார்கள். மதவாதத்துக்கு எதிராக பேசும் திராவிட கட்சிகள் சாதியை வெந்நீர் ஊற்றி அழிக்காமல், தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டார்கள்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று வைகோ அறிவித்து இருப்பது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால் சாதி மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் போட்டியிடவில்லை என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. இதற்கு முன்பு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, சாதி மோதல்கள் நடந்ததா? சாதி மோதல் நடக்கும் என்பதை முன் கூட்டியே எப்படி சொல்ல முடியும். பணத்தை நம்பி தான் திராவிட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் பணம் ஒரு காரணியாக இருப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.  மேற்கண்டவாறு சீமான் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.