Show all

கோவன் கைது நடவடிக்கையில், சட்டவிதிமீறல் இல்லை: வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகார மையத்தின் வீதி பாடகர் கோவன்.  இவர் கடந்த வௌ;ளிக்கிழமை திருச்சியில்  கைது செய்யப்பட்டார். பாடல் மூலம் அரசு கொள்கைக்கு எதிராக பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியதாகவும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் போக்கை  ஏற்படுத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டி, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரை சென்னை தலைமை பெருநகர  மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கோவன் கைது நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்பவர்  ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

மனுவில்,  கோவன் கைது நடவடிக்கையில் போலீசார் சட்ட விதிகளைப் பின்பற்ற வில்லை. அவரது கைது சட்டவிரோதமாகும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கோவன் கைது தொடர்பான சி.டி.  கோப்புகளைத் தாக்கல் செய்தார்.

கோவனை கைது செய்த போலீசார், 24 மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில்  அடைத்துள்ளனர். என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவன் கைது நடவடிக்கையில், சட்ட விதிமீறல் இல்லை. எனவே, இந்த மனுவை  முடித்து வைக்கிறோம். மனுதாரர் சட்டப்பூர்வமான நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.