Show all

இந்தியாவின் உயரமான மனிதரான பொடகரி போலிபாக்க மாரடைப்பால் மரணம்.

நாட்டின் உயரமான மனிதரான பொடகரி போலிபாக்க கட்டய்யா மாரடைப்பால் மரணமடைந்தார்.  தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், புட்னூரு கிராமத்தைச் சேர்ந்தவர் போலிபாக்க கட்டய்யா. 7.6 அடி உயரம் கொண்ட இவரை நாட்டின் உயரமான மனிதர் என்று ‘லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ அங்கீகரித்திருந்தது. ஆசியா கண்டத்தின் உயரமான மனிதர்களில் இவர் இரண்டாம் இடத்தில் இருந்தார். ஹைதராபாதில் சுற்றுலாத் துறையில் பணியாற்றி வந்த இவரை மிகவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்ப்பது வழக்கம். கட்டய்யாவுடன் நடிகர், நடிகைகள் உட்பட பொதுமக்களும் அவ்வப்போது புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, ஹைதராபாதில் சிகிச்சை பெற்று வந்த கட்டய்யா, நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். பின்னர் இவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.