Show all

சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார் நேற்றிரவு காலமானார்

சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார்  நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். சத்தியபாமா கல்வி குழுமங்களின் தலைவராக இருந்து வந்தவர் ஜேப்பியார்(85). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு காலமானார். இதையடுத்து, சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஜேப்பியார் உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு கல்வி துறை சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜேப்பியாருக்கு, தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் பரந்து விரிந்துள்ளன. எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழக சட்ட மேலவை அரசு கொறடாவாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.