Show all

எட்டு பேர்கள் தலைக்கு ஐந்து கிலோவாக பங்கிட்டுக் கொண்டார்களாம்! திருச்சி லலிதா நகைக்கடை நகைகள் கொள்ளை.

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி லலிதா நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஏறத்தாழ நாற்பது கிலோ நகைகளை திருடி, எட்டு பேர்கள் தலைக்கு ஐந்து கிலோவாக பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைக் காவல்துறையினர் துப்பு துலக்கினார்கள். 

திருவாரூர் காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தப்பி ஓட முயன்ற போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டான். அவனிடம் இருந்த தங்க நகைகளையும் மீட்ட காவல்துறையினர் தப்பி ஓடிய சுரேசைத் தேடினார்கள். ஆனால் அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தலைமறைவானான்.
 
அதன் பிறகே இது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநில வங்கிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முருகன் தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் முருகனும் தலைமறைவாகியுள்ளான். முருகனைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,296.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.