நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சாலிக்கிராமத்தில் வாக்களித்தார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள
வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார். சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா 9:55 மணியளவில் வாக்களித்தார் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் மு.கருணாநிதி
கோபாலபுரத்தில் வாக்களித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அரும்பாக்கத்தில்
வாக்களித்தார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி
ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார். நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் தனது
வாக்கினை செலுத்தினார். கமல்ஹாசன், நடிகை கவுதமி மற்றும் மகள் அக்ஷ்ராஹாசன் ஆகியோருடன்
சென்னை ஆழ்வார்பேட்டையிலும் வாக்களித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில்
வாக்களித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.