Show all

யார் தடுத்தாலும் எட்டு வழிச்சாலை அமையுமாம்! கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பிதற்றுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை யார் தடுத்தாலும் நிற்காது உறுதியாகத் திட்டம் நிறைவேற்றப்படும் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் கோவில் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குசேகரித்த போது பேசிய அவர், 
சிலரின் தூண்டுதலால், சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை மக்கள் எதிர்ப்பதாகவும், ஆனால் யார் தடுத்தாலும், அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். 
பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் திட்டம் உறுதியாக நிறைவேற்றப் படும் என்பதை வேறு மொழியில் சொன்னால் மக்களுக்குப் புரியாதா என்ன? 
அந்த வேறுமொழி 'மக்கள் விரும்பினால் திட்டம் நிறைவேற்றப் படும்' என்பதுதான். இப்படி சுசகமாக பேசி மக்களிடம் வாக்கு வாங்கும் முயற்சியை யார் பயிற்சி கொடுத்தார்கள் பொன்.ராதாகிருஷ்ணன்? ஏமாறமாட்டார்கள் மதம் பிடிக்காத தமிழர்கள்- மதம் பிடித்த பாஜகவினரிடம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,123.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.