Show all

மீண்டும் ஸ்டெர்லைட்டா! சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை; நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை. கமல் காட்டம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டையில் நெடுவாசல், புள்ளான்விடுதி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை, மக்கள்நீதி மையத்தின் தலைவர் கமல் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, நிவாரணபொருட்களை வழங்கி வருவதாக கூறுகிறது. ஆனால், களத்தில் உள்ள மக்களை சந்திக்கையில், அவர்கள் சொல்வதற்கு மாறாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மக்கள் கோபத்தின் வெளிப்பாட்டை, என்னிடம் காட்டுகின்றனர். நடுவண் அரசு, தமிழகத்திற்கு பாராமுகம் காட்டுகிறது.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து, தற்போது வந்துள்ள ஆய்வறிக்கையால், சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், சட்ட வல்லுனர்களிடம் அரசு ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கமல்கூறினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.