Show all

மர்மமான முறையில் சடலமாக கிடந்த நடிகை சிம்ரன்சிங்!

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிக்சாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரன்ட் 2, தில் கா ராஸா ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் இறந்த நிலையில் மகாநதிக்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பல்பூர் எனும் ஒரே ஒரு பாடல் மூலம் ஒடிசா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சிம்ரன். இவரது முழுப் பெயர் சிம்ரன் சிங். 

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தின் கொய்ரா மாதா எனும் கிராமத்தில் மகாநதிக்கரையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே ஒரு கைப்பை கிடந்துள்ளது. அதனை எடுத்து ஆராய்ந்த போது உயிரிழந்து கிடந்தது பிரபல நடிகை சிம்ரன் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையை விரைவுபடுத்திய காவல்துறையினர், சிம்ரன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்து சிம்ரன் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக சென்ற மகள் வீடு திரும்பவில்லை என்றும், அவரது சடலத்தை உடற்கூறு ஆய்வுக் கூடத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

சிம்ரனின் கணவர் குடும்பத்தினர் மீது சந்தேகம் வலுத்துள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில் இந்தக் கொலையில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.