Show all

நடிகர் சூர்யா ,அடையாறு மேம்பாலத்தில் ஒரு காட்டு காட்டிவிட்டார்

சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையார் சென்று கொண்டிருக்கும் போது திரு.வி.க மேம்பாலத்தின் அருகே திடீரென முன்னே சென்ற கார் ப்ரேக் போட்டதால், பிரவீன் காரின் மீது மோதி கீழே விழுந்தார்.

பிறகு அந்த காரை ஓட்டி வந்த பெண்ணுக்கும், பிரவீனுக்கும் வாக்குவாதம் முற்றி சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த வழியாக நடிகர் சூர்யா தன்னுடைய காரில் வந்தார். நடுரோட்டில் அந்த பெண்ணும், பிரவீண்குமாரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்த்த சூர்யா, காரை விட்டு கீழே இறங்கி வந்தார்.

பிரச்சினை குறித்து கேட்டறிந்த அவர், பிரவீண்குமாரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். சூர்யவைக்கான கூட்டம் கூடியதால், உடனடியாக சூர்யா தனது காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் சூர்யா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்னை பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்றும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.