Show all

திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்(45). இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகின்றார். அந்த நிறுவனத்தின் 3-வது தளத்திலேயே குடியிருந்து வந்துள்ளனர்.

 

தாமரைக்கண்ணனை, அவரது தந்தை செல்பேசியில் இன்று காலை 5 மணிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் செல்பேசியை யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்போது, வீட்டின் முகப்பில் தாமரைக்கண்ணனும், பக்கத்து அறையில், அவரது மனைவி பிரபாவதி, மற்றொரு அறையில் அவரது மகன்கள் தனுஷ்(14), அனுஷ்(10) ஆகியோர் வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இவர்கள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.