Show all

கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், 6 நிறுவனங்கள்...

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், 6 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, நிறுவனங்களின் மனுவிற்கு கர்நாடக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்கவுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களும் போலியானவை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.