ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் தெடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல் ஹூசைன் இலங்கைக்கு வருகை புரிவார; என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த அறிக்கை கடந்த 21ஆம் நாள் இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.