Show all

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம்

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ.க.வினரிடையே அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வடஇந்தியாவில் பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டார். புதுவை மாநிலத்தில் 89 சதவீத கிராம மக்கள் பாஜகவை எதிர்நோக்க தொடங்கிவிட்டனர் என்றார்.

பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை கிராம மக்களிடம் கட்சியினர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2016-ல் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முனைப்புடன் செயல்படவும் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.