திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் வழக்கில் தற்போது பெண் நிருபர் மாலதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த இயக்குநர் வி. சேகர், பண நெருக்கடியால் சிலை திருட்டு கும்பலுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், வி.சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் நிருபர் மாலதி கைது செய்யப்பட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.