Show all

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் முடிவு. தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை அடுத்த மாதம் 29ம் தேதி வரை நடத்த அவைத் தலைவர் தனபால் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் பேரவையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் அவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. தொடரின் முதல் நாளான 24ம் தேதி அப்துல் கலாம், எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.

செப்டம்பர் 29ம் தேதி வரை பேரவை கூட்டத்தை தொடரவும் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவைத் தலைவர் தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடரில் தேமுதிக உறுப்பினர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. கூட்டத் தொடரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின. பூரண மதுவிலக்கு வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறி வருவதால் இப்பிரச்சனையை தொடரில் எழுப்ப திமுக உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.