Show all

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பான் கீ மூனுக்கும் இடையே சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன்போதே, குறித்த சந்திப்பு தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.