Show all

நூற்பாலை தொழிலை காப்பாற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

நூற்பாலை தொழிலை காப்பாற்ற அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில், சிறு மற்றும் குறுதொழில் முன்னேற்றத்திற்காக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அ.தி.மு.க. அரசின் செயலற்ற போக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நூற்பாலைகளின் நெருக்கடியான நிலைமை குறித்து அரசுக்கு மனு அனுப்பியும், கோரிக்கை வைத்தும் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சூழலால், கடந்த மூன்று ஆண்டுகளில் பல நூற்பாலைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர், நூற்பாலை தொழில் முன்னேற்றத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.