Show all

தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி

தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன் மேம்பாட்டிற்காகவே ரம்மி விளையாடப்படுவதாக கிளப் உரிமையாளர்கள் சார்பில் வாதம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.