Show all

இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று வீடு திரும்பினார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று வீடு திரும்பினார்.

கடந்த வௌ;ளிக்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடந்த 2 நாட்களாக அவருக்கு இருதய பரிசோதனைகள் அனைத்தும் நடைபெற்று மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின்னர் இன்று காலை இளையராஜா வீடு திரும்பினார். இந்த தகவலை அவருடைய அண்ணன் மகனும், இயக்குனருமான வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.