Show all

மீண்டும் நடிக்க வரும் நாள் உனக்கு மிகச் சிறந்த நாளாக அமையும்

பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு மணந்தார். பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார் ஜெனிலியா. சில மாதங்களுக்கு முன் ஜெனிலியா அழகான ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். கணவரும், குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. கணவரிடம் கூறியபோது, ‘உன் இஷ்டம்’ என்று பச்சை கொடி காட்டினார்.

இதுகுறித்து ஜெனிலியா இணைய தள டுவிட்டர் பக்கத்தில்,‘மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல தயாராகி வருகிறேன். கடந்த 3 வருடமாக நடிக்காமல் இல்லறத்தில் மூழ்கிவிட்டேன். மீண்டும் ஒரு நாள் நடிப்பதற்கான நல்ல நாள் அமையும் என்ற உணர்வு இருந்தது. அது இப்போது வந்திருக்கிறது. கதை கேட்டு வருகிறேன். விரைவில் எந்தபடத்தில் நடிக்கிறேன் என்பதை சொல்வேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். ‘மீண்டும் நடிக்க வரும் நாள் உனக்கு மிகச் சிறந்த நாளாக அமையும். நடிப்பதற்காகவே நீ பிறந்தாய்’ என டுவிட்டரில் வாழ்த்தியிருக்கிறார் கணவர் ரித்தேஷ்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.