Show all

தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள தமிழர் சுந்தர் பிச்சைக்கு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்தவரான தாங்கள் மிகவும் போட்டியான ஒரு சூழ்நிலையில், தங்களது திறமையாலும், கடின உழைப்பாலும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளீர்கள்.

இது, தமிழகத்துக்கு பெருமை தரக்கூடிய விஷயமாகும். மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தாங்கள் ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறீர்கள். இந்தச் சூழலில், தமிழக அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பல்வேறு உயர்ந்த நிலைகளை அடைந்து வெற்றி பெறுவதற்கு எனது வாழ்த்துகள் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.