Show all

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாமிர்சா பரிந்

தெலுங்கானாவின் நல்லெண்ண தூதரக செயல்பட்டு வரும் சானியா மிர்சா, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் ஜூப்லி ஹில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சானியாவின் கார் நம்பர் ப்ளேட், போக்குவரத்து விதிகளை மீறும் வகையில் தவறாக இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

இதனைத் தொடர்ந்து சானியா மிர்சாவுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப் பட்டது. அதே வேளையில் நேற்று ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாவின் பெயரை. கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் நடுவண் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்த விருதுதான் இந்திய விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது ஆகும்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.