Show all

சந்திரபாபு நாயுடு, ஊழலில்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று ரோஜாகுற்றச்சாட்டு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழலில் முதல் இடத்தில் இருப்பதாக நடிகையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் பிரிவு தலைவருமான ரோஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தலின் போது 200 வாக்குறுதிகளைக் கொடுத்த சந்திரபாபு நாயுடு, அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.

வாக்குக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால், அவரால் நடுவண் அரசிடம் எந்த உதவியும் கேட்க முடியவில்லை.

ஆந்திராவை முதல் மாநிலமாக்குவேன் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஊழலில்தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்று ரோஜா கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.