Show all

ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மோடி தலைமையிலான நடுவண் அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்பட்டு ஏவிவிடுகிற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 5 இயக்கங்களின் கூட்டமைப்பான மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மக்கள் சக்தியின் வலிமையை மக்கள் விரோத நடுவண், மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 13ம் தேதி அறப்போர் உணர்த்திடும் விதத்தில் அறப்போரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.