Show all

ஆம் ஆத்மியில் இருந்து விலகி சுவராஜ் அபியான் என்ற அமைப்பை நடத்தி வந்த யோகேந்திர யாதவ்வை தில்லி

ஆம் ஆத்மியில் இருந்து விலகி சுவராஜ் அபியான் என்ற அமைப்பை நடத்தி வந்த யோகேந்திர யாதவ்வை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகளைத் திரட்டி யோகேந்திர யாதவ் போராட்டம் நடத்தினார். அப்போது அவரை காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்தில் அடைத்தனர;.

இன்று காலை, அவர் செய்தியாளர்களிடம் பேச முயன்ற போது, அவரை வலுக்கட்டாயமாக தில்லி காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்.

அவரை கைது செய்ததற்கும், அவரிடம் மோசமாக நடந்து கொண்டதற்கும், தில்லி காவல்துறைக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.