Show all

மரண தண்டனை கைதியை காப்பாற்றும் துருதுருப்பான பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கின்றேன்

வட்டாரம், உன்னாலே உன்னாலே, பேராண்மை, ஜெயம்கொண்டான் போன்ற பல படங்களில் நடித்திருந்த நடிகை வசுந்தரா காஷ்யப், சமீபத்தில் ஆபாச படம் வெளியான சர்ச்சையில் சிக்கினார்.இந்நிலையில் அவர் தற்போது 'புத்தன் ஏசு காந்தி' என்ற படத்தில் பத்திரிகையாளர் வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் இயக்கிய அனுபவம் பெற்ற வெற்றிவேல் சந்திரசேகர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கிஷோர் மரண தண்டனை கைதியாக நடிக்கின்றார்.

செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கிஷோரை, பத்திரிகையாளர் வசுந்தரா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தில் வசுந்தராவுக்கு ஜோடியாகவும் ஹீரோவாகவும் நடிக்கும் அசோக், இன்னொரு பத்திரிகையாளராக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் மதுமிதா, அகில் ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் குறித்து வசுந்தரா கூறும்போது, 'மரண தண்டனை கைதியை காப்பாற்றும் துருதுருப்பான பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கின்றேன். இந்த படத்திற்காக பத்திரிகையாளர்களாக இருக்கும் எனது நண்பர்களிடம் பல டிப்ஸ்கள் கேட்டு வருகிறேன். இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.