Show all

கலவர பூமியான சென்னை அமைந்தகரை

சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.

அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் மாணவிகளும் ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி வருவதால், போலீசார் அடிதடியில் இறங்கியுள்ளனர்.இதனால் அமைந்தகரை கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

இதே போன்று, விருத்தாசலத்திலும் மதுவுக்கு எதிரானப் போராட்டம் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி நடப்பதால் அங்கும் பதற்றம் நிலவி வருகிறது.சென்னையில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.பெரும்பாலான இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.