Show all

தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருப்பம்

தமிழக இளைஞர்கள் அனைவரும், தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரும்பியதாக அவரது கல்லூரி தோழர் சம்பத்குமார் கூறினார்.திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்த கலாமின் நெருங்கிய தோழராக இருந்தவர் சம்பத் குமார்.

கோவையில் வசித்து வரும் சம்பத்குமார் தனது தோழர் அப்துல் கலாமின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயருற்றார். அவருடனான நட்பு குறித்து பேசிய சம்பத், நாங்கள் எப்போது சந்தித்துப் பேசினாலும், தமிழ் பற்றிய பேச்சு நிச்சயம் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.