Show all

ஆட்டோ ஓட்டுநர் மகன் அசத்தல்

மகாராஷ்ட்ரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.கடந்த மே மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில் படித்து வந்த மாணவர் சச்சின் தூபே முதன் முறையிலேயே பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை வெற்றிகரமாக முடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தாண்டு சிஏ தேர்வில் மொத்தம் 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.