Show all

ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகியோர் ஐபிஎல் சூதாட்ட புகாரில் இருந்து விடுவிப்பு

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா விடுவிக்கப்பட்டனர். இந்த அறிவி்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீசாந்த் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் தொடர்ந்து விளையாட பி.சி.சி.ஐ., எங்களை அனுமதிக்கும் என்று நம்புகிறேன். எங்களுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த காலத்தை மறந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் என்று தெரிவித்தார்.

ஆனால், ஐ.பி.எல்., ஸ்பாட் பிக்சிங் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகியோர் மீதான தடை தொடரும் என பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.