Show all

சூலை 26 ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில்

சூலை 26ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

பாமகவின் 4-ஆவது மண்டல மாநாடு வேலூரை அடுத்த பள்ளி கொண்டா நகரில் சூலை 26-ஆம் நாள் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோவையில் மாநாடு நடந்து முடிந்த 14 நாள்களில் வேலூரில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இருவார இடைவெளியில் இரு பிரமாண்ட மாநாடுகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக வரலாறு இல்லை.

அந்தச் சாதனையை பாமகதான் முதன் முதலில் படைக்க உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும் என்று அவர்கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.