Show all

வரதட்சணை, காதல் விவகாரம், ஆண்மையற்றதன்மை ஆகியவையே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்காதல் தோல்வியே என்றுமத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறிய கருத்திற்கு தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் இந்த வருடத்தில் மட்டும் 1,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு விவசாயகடன் தான்காரணம் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மத்திய விவசாயத் துறைம ந்திரி கூறுகையில், , விவசாயிகள், குடும்ப பிரச்னை, உடல்நிலை கோளாறு, போதை பொருள் பழக்கம், வேலையின்மை, சொத்து தகராறு, தொழில் பிரச்னை, காதல் விவகாரம்ல ஆண்மையற்ற தன்மை, திருமணம் ரத்தாவது, வரதட்சணை பிரச்னை, மற்றும் தெரியாத பல காரணங்களினால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று விளக்கம் அளித்தார். விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் கடன் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார்.

இவர் கூறிய கருத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.