Show all

சிறுத்தை பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு - கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்ததால் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.சிக்மகளூர் என்னுமிடத்தில் உள்ள பள்ளிக்கு அருகே சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. அப்போது அங்கிருந்த 3 பேரை சிறுத்தை கடித்து காயப்படுத்தியது.

இதையடுத்து, பொதுமக்கள் அதை விரட்டியபோது, திடீரென அங்கிருந்த பள்ளிக்குள் சிறுத்தை புகுந்தது.இதனால், பள்ளி மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை நீண்டப் போராட்டத்திற்குப் பின்னர் பிடித்துச் சென்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.