Show all

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக்க வழக்கு தேமுதிக மனு தள்ளுபடி

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என ஜெகதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்த்து கொள்ளுமாறு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் ஆதாயம் இருப்பதாக கூறி, தேமுதிகவினரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் சபாநாயகர் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், இதில் ஓரளவிற்கு மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்று கூறி, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.