Show all

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூரில் காவல்துறை விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஷகீல் அகமது உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடந்த மாதம் 27ந் தேதி கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரம் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 118 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் கலவரம் நடந்த வேலூர் மாவட்டத்திற்கு செல்லக்கூடாது என்றும், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் தங்கி இருக்க வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.