Show all

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தபடி, 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 10,000 பேருக்கு ஒரு டாஸ்மாக் கடை என்ற அவல நிலை ஏற்பட்டு விட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது ஏதோ தி.மு.க.விற்கு திடீரென்று ஏற்பட்ட எண்ணம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, 2016-ல் செயல்வடிவம் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.