Show all

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக மோசடிக்காக 5 பேர் கைது

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மெட்ரோ நிறுவன அதிகாரி ராஜரத்தினம் என்பவர் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் பால்ராஜ், மகேந்திரன், மயில்விழி, நாகராஜ். அர்ஜூன் குமார் ஆகிய 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை மெட்ரோ, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 2 கோடி ருபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்,

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.